25.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி



மூன்று கவிதைகள்



முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன


நீலக் குழல் விளக்கில்


விட்டில் பூச்சிகள்



உள்ளே



மழைக்குப் பயந்து


அறைக்குள் ஆட்டம்


போட்டன துவைத்த துணிகள்



விடலைகள்



துள்ளித் துவண்டு


தென்றல் கடக்க


விஸில் அடித்தன


மூங்கில் மரங்கள்



- பாலகுமாரன்



பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
- அழகியசிங்கர்

19.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

பூக்கள்

வெட்கமின்றி சிரித்தது

கொட்டும் மழையில்

குளிக்கும் ரோஜாப்பூ


சூரியன் மறைவில்

கூம்பிய மலர்கள்

மூடிப்பிடித்தவை அப்

பாவி வண்டுகள்


பனிபூக்க முகம் பூக்கும்

நான் வளர்க்கும்

ரோஜாப்பூ


மனிதரோடு மாடுகள்

போகும் ஊரோர

தார்ச்சாலை மரங்கள்

இறைந்திருக்கும்

மலர்கள்


இரவில் ஊரார் கால்

கழுவ

போகுமிடம் பெருமாள்

குளம்

புண்ணாய் நீரெல்லாம்

ஊதாப்பூ


வேலைக்குப் போகும்

மகளிராய்

பஸ் ஸ்டாண்டில்

கூடைப்பூ


அருகழைத்து பின்

விரதமென்று புறந்

தள்ளும் பவழ மல்லி.


- பதி

16.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத்





விதி


அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் குஞ்சுக்காய்
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

- கலாப்ரியா

12.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

திட்டமற்ற......


வானம் கட்டுப் பாடற்று

பெற்றுத் திரியவிட்ட

மேகங்கள்

பொல்லா வாண்டுகள்

நினைத்த இடத்தில்

கவலையற்று

நின்று தலையில் பெய்துவிட்டு

மூலைக்கொன்றாய்

மறையுதுகள்

வெள்ளை வால்கள்

- எஸ் வைதீஸ்வரன்