21.4.10

புள்ளி என்ற பெயரில் சின்ன கவிதைத் தொகுதி..

அக்ரகாரத்துக் கதவுகள்

எங்களூர் அக்ரகாரத்தில்

அதிசியங்கள் ஆயிரம் உண்டு

செம்மண் பட்டையிட்டு

செங்காவிச் செறிவீச்சில்

கொலுவிருக்கும் வீடுகளின்

ஜன்னல்களுக்கோ

கதவுகளே இல்லை

ஆனாலும்

டெர்ரிக்காட் பளபளப்பில்

குதிகால் நடையுயர்த்தி

நட்ட நடுத்தெருவில்

நீள நடந்தால்

கறுப்பு சிவப்பு

பழுப்பு மாநிறப்

பரபரப்பு முகங்கள்

கதவுகளாய் முளைக்கும்

- நா. விச்வநாதன்