கீழே விழுந்துகிடந்த ரூபாய்த் தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் யார் யார் கைகளிலிருந்து தப்பி விழுந்ததோ என்ன பாடுபட்டதோ என்ன துரோகம் செய்ததோ
கவிதை இரண்டு
எண்ணற்ற வழிகளில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் ஆனால் சிலரை மட்டும் பார்க்கிறோம் இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம் இன்னும் இன்னும் சிலரிடம்தான் உறவு வைத்துக்கொள்கிறோம்.
கவிதை மூன்று நீண்ட சோம்பல் என்னிடம் ஒட்டிக்கொண்டது நாற்காலியில் உட்கார்ந்தால்போதும் தூக்கம் கண்ணைச் சுழற்றும் ஒன்றும் தோன்றாமல் ஒரு நிமிடம் என்னால் இருக்க முடியவில்லை
கவிதை நான்கு
பிழிய பிழிய மழைப்பெய்து விழியை வைத்தது கட்டுப்பாடற்ற முறையில் ஒழுங்கு தப்பி தெறித்தன வாகனங்கள்
No comments:
Post a Comment