25.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி



மூன்று கவிதைகள்



முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன


நீலக் குழல் விளக்கில்


விட்டில் பூச்சிகள்



உள்ளே



மழைக்குப் பயந்து


அறைக்குள் ஆட்டம்


போட்டன துவைத்த துணிகள்



விடலைகள்



துள்ளித் துவண்டு


தென்றல் கடக்க


விஸில் அடித்தன


மூங்கில் மரங்கள்



- பாலகுமாரன்



பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
- அழகியசிங்கர்

No comments:

Post a Comment